இந்தியா

VIDEO: தண்டவாளம் அருகே குட்டியை பிரசவித்த யானை.. எதிரே வந்த ரெயில் - மக்கள் செய்த செயல்

Published On 2025-07-10 04:45 IST   |   Update On 2025-07-10 04:45:00 IST
  • லோகோ பைலட் ரெயிலை நிறுத்தினார்.
  • இந்த சம்பவத்தின் வீடியோவை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜார்க்கண்டில் ரெயில் தண்டவாளத்தில் யானை தனது குட்டியை பிரசவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜார்க்கண்டில் ஒரு கர்ப்பிணி யானை தண்டவாளம் அருகே வந்து பிரசவ வேதனையில் நின்றது. அதே நேரத்தில், அருகில் ஒரு ரெயில் வருவதை உள்ளூர்வாசிகள் கவனித்தனர். அவர்கள் உடனடியாக உஷாராகி ரெயிலை நிறுத்தினர். லோகோ பைலட் ரெயிலை நிறுத்தினார்.

பின்னர் யானை ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தது. பின்னர், அது மெதுவாக தனது குழந்தையுடன் காட்டுக்குள் நடந்து சென்றது. தாயும் குழந்தையும் பாதுகாப்பாக அகலும் வரை வரை ரெயில் அங்கேயே 2 மணிநேரம் நின்றது.

இந்த சம்பவத்தின் வீடியோவை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜார்க்கண்ட் வனத்துறை அதிகாரிகளையும், யானையின் பிரசவத்திற்கு உதவியவர்களின் மென்மையான மனதையும் அவர் பாராட்டினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News