இந்தியா

தெலுங்கானாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எட்டு பேரின் உடல் மீட்பு

Published On 2023-07-28 17:15 GMT   |   Update On 2023-07-28 17:15 GMT
  • பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
  • அடித்துச் செல்லப்பட்ட 12 பேரில் நான்கு பேர் உயிர் தப்பினர்.

தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, முலுகு மாவட்டத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வசித்து வந்த 12 பேர் நேற்று பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் உயிர் தப்பினர்.

காணாமல் போன 8 பேரின் உடல்கள் இன்று கண்டெடுக்கப்பட்டன.

இதற்கிடையே, ஜூலை 22 முதல் மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் எட்டு பேர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News