இந்தியா

மல்லிகார்ஜூன் கார்கே

ராவணனுக்கு 10 தலை இருந்தது போல் மோடிக்கு 100 தலையா இருக்கு? - கார்கே காட்டம்

Published On 2022-11-29 10:51 GMT   |   Update On 2022-11-29 12:18 GMT
  • குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது.
  • குஜராத்தின் மகனை காங்கிரஸ் அவமதித்து விட்டது என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓயும் நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

மாநகராட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, எம்.எல்.ஏ. தேர்தலாக இருந்தாலும் சரி, எம்.பி. தேர்தலாக இருந்தாலும் சரி. அனைத்து இடங்களிலும் மோடியின் முகம்தான் உள்ளது.

உங்கள் முகத்தை நாங்கள் எத்தனை முறைதான் பார்ப்பது? உங்களுக்கு எத்தனை வடிவங்கள் உள்ளன? ராவணனுக்கு 10 தலை இருந்தது போல் மோடிக்கு 100 தலையா இருக்கு? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

குஜராத்தின் மகனை காங்கிரஸ் அவமதித்து விட்டது என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News