இந்தியா

காங்கிரசின் வெற்று வாக்குறுதியில் ஏமாந்து விடாதீர்கள்: தெலுங்கானா மக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்

Published On 2023-11-22 08:37 GMT   |   Update On 2023-11-22 09:15 GMT
  • கர்நாடகா மாடல் என மற்ற மாநிலங்களில் கூறி வரும் காங்கிரஸ், உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வி.
  • தெலுங்கானா மக்களை ஏமாற்றுவதற்கான 6 உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. சந்திரசேகர ராவ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்துள்ளார். அவரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் நினைக்கிறது. இதற்கிடையே தெலுங்கானாவில் காலூன்ற பா.ஜனதா விரும்புகிறது.

மூன்று கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தெலுங்கானாவில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததில் இருந்து, கர்நாடக மாடல் என மற்ற மாநிலங்களிலும் பிரசாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜனதா தலைவரும்மான எடியூரப்பா தெலுங்கானாவில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது எடியூரப்பா கூறியதாவது:-

கர்நாடகாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்த காங்கிரஸ், அதை நிறைவேற்றாமல் கர்நாடக மக்களை ஏமாற்றியுள்ளது.

கர்நாடகா மாடல் என மற்ற மாநிலங்களில் கூறி வரும் காங்கிரஸ், உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் கர்நாடகா மக்களை ஏமாற்றியுள்ளது.

தெலுங்கானா மக்களை ஏமாற்றுவதற்கான 6 உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொய்கள் மற்றும் வெற்று வாக்குறுதிகளால் ஏமாற வேண்டாம் என தெலுங்கானா மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News