இந்தியா

மூத்த சகோதரி மீது அதிக பாசம்.. வயதான தாயை சமையலறை கத்தியால் குத்திக் கொன்ற இளைய மகள்

Published On 2025-01-04 09:08 IST   |   Update On 2025-01-04 09:09:00 IST
  • கழுத்து மற்றும் பிற உடல் பாகங்களில் பலமுறை குத்தி கொலை செய்துள்ளார்.
  • அதன்பின் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தன்னை விட சகோதரி மீது அதிகம் அன்பு செலுத்திய வயதான தாயை மகள் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கிழக்கு குர்லாவின் குரேஷி நகரில் வசித்து வந்தவர் சபீரா பானு ஷேக் (71). இவரது 41 வயது மகள் மகள் ரேஷ்மா முஃபர் காசி[ Reshma Muffar Qazi]. கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டில் இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது.

அப்போது சமையலறை காய்கறி வெட்டும் கத்தியால் தாய் சபீராவை வயிறு, மார்பு, கழுத்து மற்றும் பிற உடல் பாகங்களில் பலமுறை குத்தி கொலை செய்துள்ளார். அதன்பின் அருகில் உள்ள சுனாபாட்டி[Chunabhatti] காவல் நிலையத்துக்கு சென்று குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

காசி தனது மூத்த சகோதரியை அவர்களின் தாய் அதிகமாக நேசிப்பதாக நினைத்து பொறாமை கொண்டு இந்த கொலையை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து குற்றத்தை உறுதி செய்த பின்னர் காசியை போலீஸ் கைது செய்துள்ளது. 

Tags:    

Similar News