கர்நாடகாவில் 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது உறுதி: சித்தராமையா
- 2019 தேர்தல் பா.ஜனதா 25 இடங்களில் வெற்றி பெற்றது.
- தற்போது காங்கிரஸ் கர்நாடகா மாநில ஆளுங்கட்சியாக உள்ளது.
இந்தியாவின் தென் மாநிலங்களில் கடந்த 2019 தேர்தலில் பா.ஜனதா மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை இழந்தது.
சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை போன்று மக்களவை தேர்தலில் வெற்றி பெற அம்மாநில முதல்வர் சித்தராமையா தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த முறை பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இரண்டு கட்சிகளும் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.
இந்த முறை மதசார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்துள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என சித்தராமையான தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் "கர்நாடகா மாநிலத்தில் வாக்களார்களிடம் நல்ல வரவேற்று உள்ளது. ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளை பற்றி எனக்குத் தெரியாது. கர்நாடகா மாநிலத்தை பொருத்தவரை நாங்கள் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.
தற்போது வழங்கப்பட்டு வரும் உத்தரவாத திட்டங்கள், அடுத்த முறை ஆட்சி அமைத்தால் எந்த காரணத்திற்காகவும் நிறுத்தப்படாது. உத்தரவாத திட்டங்கள் தொடரும். அதற்காக பட்ஜெட்டில் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது." என்றார்.
கர்நாடகா மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 26-ந்தேதியும், 2-வது கட்ட வாக்குப்பதிவு மே 7-ந்தேதியும் நடக்கிறது.