இந்தியா

ராகுல் காந்தியை விமர்சித்த திக்விஜய் சிங் சகோதரரை கட்சியில் இருந்து நீக்கிய காங்கிரஸ்

Published On 2025-06-12 03:00 IST   |   Update On 2025-06-12 03:00:00 IST
  • உறுப்பினர் பதவியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • ராகுல் புத்திசாலித்தனமாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்ததற்காக, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திக்விஜய் சிங்கின் சகோதரரும், மத்தியப் பிரதேசத்தின் மூத்த தலைவருமான லட்சுமணன் சிங்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஐந்து முறை எம்.எல்.ஏ.வுமான லட்சுமணன் சிங், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் ஒழுங்குமுறைக் குழு உறுப்பினர் செயலாளர் தாரிக் அன்வர் அறிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ராகுல் காந்தி மற்றும் அவரது மைத்துனர் ராபர்ட் வதேரா அளித்த பதில்களை குறிப்பிட்டு, லட்சுமணன் சிங், அவர்களை முதிர்ச்சியற்றவர்கள் என்று அழைத்தார்.

மேலும், ராகுல் புத்திசாலித்தனமாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மாநிலப் பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் லட்சுமணனின் தொடர்ச்சியான செயல்களுக்கு கட்சிக்குள் அவருக்கு எதிராக எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் மத்திய தலைமை இந்த ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளது.

Tags:    

Similar News