இந்தியா

புதிய கட்டுப்பாடுகள் விதித்த RBI - பங்குச் சந்தை தரகு நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவு

Published On 2026-02-16 12:26 IST   |   Update On 2026-02-16 12:26:00 IST
  • புரோக்கர்கள் தங்களின் சொந்த வர்த்தகத்திற்காக கடன் பெறுவதற்கு இனி அனுமதி கிடையாது
  • BSE, ANGEL ONE, MCX, GROWW போன்ற தரகு நிறுவன பங்குகளின் விலை 5 - 10% வரை சரிவை சந்தித்தது

பங்குச்சந்தை புரோக்கர் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் இருந்த தளர்வுகளை நீக்கி, புதிய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ரிசர்வ் வங்கி அதிரடி காட்டியுள்ளது.

இதன்படி, இனி புரோக்கர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கும் போது, அந்தப் பணத்திற்கு இணையான 100% பிணையை கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக, புரோக்கர்கள் தங்களின் சொந்த வர்த்தகத்திற்காக (Proprietary Trading) வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதற்கு இனி அனுமதி கிடையாது என்று ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த புதிய கட்டுப்பாடுகளால் பங்குச்சந்தை தரகு நிறுவனங்களான BSE, ANGEL ONE, MCX, GROWW போன்ற தரகு நிறுவன பங்குகளின் விலை 5 - 10% வரை சரிவை சந்தித்தது

Tags:    

Similar News