இந்தியா

ஓங்கி முட்டிய பூம்பூம் மாடு- நூலிழையில் உயிர் தப்பிய நபர்: வைரலாகும் வீடியோ

Published On 2024-04-05 12:59 GMT   |   Update On 2024-04-05 16:41 GMT
  • ஸ்கூட்டருடன் கீழே விழுந்த நபர் எதிரே வந்த லாரியின் அடியில் சிக்கினார்.
  • சிசிடிவியில் பதிவான இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மகாலக்ஷ்மி நகர் லேஅவுட் பகுதியில் சாலையில் பெண் ஒருவர் பூம்பூம் மாட்டை இழுத்துச் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்த நபர் மீது பூம்பூம் மாடு திடீரென ஓங்கி முட்டித்தள்ளியது.

இதில், ஸ்கூட்டருடன் கீழே விழுந்த நபர் எதிரே வந்த லாரியின் அடியில் சிக்கினார். நல்வாய்ப்பாக, சுதாரித்துக்கொண்ட லாரி ஓட்டுனர் சட்டென்று லாரியை நிறுத்தினார்.

இதனால், சம்பந்தப்பட்ட வாகனஓட்டி நூலிழையில் உயிர் தப்பினார். சிசிடிவியில் பதிவான இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Full View

Tags:    

Similar News