search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bull attack"

    • ஸ்கூட்டருடன் கீழே விழுந்த நபர் எதிரே வந்த லாரியின் அடியில் சிக்கினார்.
    • சிசிடிவியில் பதிவான இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மகாலக்ஷ்மி நகர் லேஅவுட் பகுதியில் சாலையில் பெண் ஒருவர் பூம்பூம் மாட்டை இழுத்துச் சென்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்த நபர் மீது பூம்பூம் மாடு திடீரென ஓங்கி முட்டித்தள்ளியது.

    இதில், ஸ்கூட்டருடன் கீழே விழுந்த நபர் எதிரே வந்த லாரியின் அடியில் சிக்கினார். நல்வாய்ப்பாக, சுதாரித்துக்கொண்ட லாரி ஓட்டுனர் சட்டென்று லாரியை நிறுத்தினார்.

    இதனால், சம்பந்தப்பட்ட வாகனஓட்டி நூலிழையில் உயிர் தப்பினார். சிசிடிவியில் பதிவான இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பஞ்சாப் மாநிலத்தில் கோவில் பணிகளை பார்வையிட சென்ற மந்திரி சித்து, மாடு முட்டுவதில் இருந்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். #Sidhu #BullAttack
    ஜெய்ப்பூர்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள துர்கை கோவிலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பார்வையிட மாநில மந்திரி சித்து இன்று சென்றார். பணிகளை பார்வையிட்ட பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.



    அப்போது கோவிலை நோக்கி ஒரு காளை மாடு தறிகெட்டு ஓடிவந்தது. இதைக்கண்டதும் செய்தியாளர்கள் மற்றும் மந்திரி சித்து அங்கிருந்து ஓடினர்.

    ஆனாலும் மாடு முட்டியதில் 2 செய்தியாளர்கள் லேசான காயமடைந்தனர். இந்த தாக்குதலில் மந்திரி சித்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Sidhu #BullAttack
    ×