இந்தியா

பேருந்து

பெண்கள் இருக்கையில் ஆண்கள் பயணம்- ரூ.17000 அபராதம் வசூலிப்பு

Published On 2022-06-13 09:07 IST   |   Update On 2022-06-13 12:40:00 IST
  • பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பேருந்து இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து சென்றால் அபராதம் வசூலிப்பது வழக்கம்.
  • அரசு போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய சோதனையில் சுமார் 170 ஆண்கள் பயணம் செய்தது தெரியவந்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஓடும் நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்காக தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள பெண்களுக்கான இருக்கையில் ஆண்கள் அமர்ந்து சென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், பெங்களூருவில் போக்குவரத்து கழக ஊழியர்கள், நடத்திய சோதனையில் 170 ஆண்கள் பல்வேறு நகர பேருந்துகளில் பெண்களுக்கான இருக்கையில் அமர்ந்து பயணம் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பயணிகளிடம் இருந்து ரூ.17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பி.எம்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News