இந்தியா

ராஜஸ்தான் முதல் மந்திரியாக பஜன்லால் சர்மா தேர்வு

Published On 2023-12-12 11:03 GMT   |   Update On 2023-12-12 11:03 GMT
  • ராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
  • ராஜஸ்தான் முதல் மந்திரியாக பஜன்லால் சர்மாவை நியமித்து ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் 199 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதல் பா.ஜனதா 115 இடங்களில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய துணை தலைவர் சரோஜ் பாண்டே, தேசிய பொது செயலாளர் வினோத் டவ்தே ஆகிய துணை பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் முதல் மந்திரி யார் என்பது தேர்வு செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக பஜன்லால் சர்மாவை நியமித்து ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார்.

முதல் மந்திரிக்கான போட்டியில் முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜே, மத்திய மந்திரிகள் அர்ஜூன் ராம் மெஹ்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News