இந்தியா

தொடரும் வெயில் தாக்கம் - மேற்கு வங்காளத்தில் ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறப்பு

Published On 2023-05-31 23:09 GMT   |   Update On 2023-05-31 23:09 GMT
  • மேற்கு வங்காளத்தில் கோடை வெயிலும், வெப்ப அலையும் நீடிக்கிறது.
  • வெப்ப அலையால் அங்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுகின்றன.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் கோடை விடுமுறை முடிந்து மேல்நிலைப் பள்ளிகள் வரும் 5-ம் தேதியும், தொடக்கப் பள்ளிகள் 7-ம் தேதியும் திறக்கப்படும் என மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஆனால் மாநிலத்தில் கோடை வெயிலும், வெப்ப அலையும் நீடிக்கிறது. அங்கு இந்த மாதத்தின் முதல் பாதி வரை வெப்ப அலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றார்.

Tags:    

Similar News