இந்தியா

கண்டிஷனுக்கு ஓ.கே. சொன்ன காங்கிரஸ்: ராகுல் யாத்திரையில் பங்கேற்பதை உறுதிசெய்த அகிலேஷ்

Published On 2024-02-22 15:15 GMT   |   Update On 2024-02-22 15:15 GMT
  • உத்தர பிரதேசத்தில் கடந்த முறை காங்கிரஸ் ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெற்றது.
  • இந்த முறை காங்கிரசுக்கு 17 இடங்களை சமாஜ்வாதி ஒதுக்கியுள்ளது.

லக்னோ:

2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தேர்தல் நெருங்க நெருங்க இந்தக் கூட்டணி தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்வதில் தான் சிக்கல்.

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை காங்கிரசுக்கு அதிக இடங்கள் கொடுக்க மறுத்துள்ளது.

இதற்கிடையே, ராகுல் காந்தி தற்போது உத்தர பிரதேசத்தில்நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

நாங்கள் தரும் இடங்களை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்துகொள்வேன் என அகிலேஷ் யாதவ் கண்டிஷன் போட்டதாகத் தெரிகிறது.

உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே நேற்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்நிலையில், தனது கண்டிஷனுக்கு காங்கிரஸ் கட்சி ஓகே சொன்னதால், ராகுல் காந்தி யாத்திரையில் அகிலேஷ் பங்கேற்கிறார்.

இதுதொடர்பாக அகிலேஷ் கூறுகையில், ஆக்ராவில் நடைபெறும் யாத்திரையில் நான் பங்கேற்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News