இந்தியா

ஜார்கண்டில் சட்டென மாறிய டிரண்ட்.. சரசரவென முன்னிலைக்கு வந்த இந்தியா கூட்டணி

Published On 2024-11-23 10:34 IST   |   Update On 2024-11-23 10:46:00 IST
  • நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவானது நடந்து முடிந்தது.
  • பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மகாராஷ்டிர மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த ஆளும் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜேஎம்எம்] மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 81 இடங்களை கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்துக்குக் கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவானது நடந்து முடிந்தது.

முன்னிலை நிலவரம் 

பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் ஜேஎம்எம் இந்தியா கூட்டணி 51 இடங்களிலும் பாஜகவின் என்டிஏ கூட்டணி 28 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

திடீர் மாற்றம் 

முன்னதாக பாஜகவின் என்டிஏ 41 இடங்கள், இந்தியா கூட்டணி 32 இடங்கள் முன்னிலை என்று இருந்த நிலையில் திடீரென டிரண்ட் மாறி இந்தியா கூட்டணி பெரும்பாண்மை இடங்களில் முன்னிலைக்கு வந்துள்ளது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துக்கணிப்பு

ஜார்க்கண்டில் நியூஸ்18 வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி பா.ஜ.க. கூட்டணி 47 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

என்டிடிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் பா.ஜ.க. கூட்டணி 44 முதல் 53 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 25 முதல் 37 இடங்களிலும், மற்றவை 5 முதல் 9 இடங்களிலும் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

Tags:    

Similar News