இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 11 பேர் உயிரிழப்பு

Published On 2024-02-06 09:16 GMT   |   Update On 2024-02-06 10:40 GMT
  • விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதி.
  • தீ விபத்தால், அருகே உள்ள 60 வீடுகளுக்கும் தீ பரவியது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ௧௦௦-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தால், அருகே உள்ள 60 வீடுகளுக்கும் தீ பரவியது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

Similar News