இந்தியா

டெல்லியில் பயங்கரம்- 12 வயது மகனை கொடூரமாக கொன்ற வளர்ப்பு தந்தை

Published On 2026-01-31 10:27 IST   |   Update On 2026-01-31 10:27:00 IST
  • உனது மகன்களை கொலை செய்து விடுவேன் என்று விஜித் இளம்பெண்ணிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.
  • சிறுவனின் கண்கள் பிடுங்கப்பட்டு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி:

வடகிழக்கு டெல்லி சாஸ்திரி பூங்கா பகுதியை சேர்ந்த கணவரை இழந்த ஒரு இளம்பெண்ணை வஜித் என்பவர் கடந்த 2020-ம் திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு முதல் கணவருடன் ஏற்கனவே 3 மகன்கள் இருந்தனர்.

மகன்கள் உடன் இருப்பது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் விடுதியில் இருந்து வீட்டுக்கு வந்த மகன்களை மீண்டும் விடுதியில் சேர்த்து விடுமாறு மனைவியிடம் விஜித் தகராறு செய்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. உனது மகன்களை கொலை செய்து விடுவேன் என்று விஜித் இளம்பெண்ணிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இளம்பெண்ணின் 7-ம் வகுப்பு படிக்கும் 2-வது மகனான அல்தமாஷ் (12) நேற்று காலையில் பள்ளிக்குச் சென்றான். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவனை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் வஜித், அல்தமாசின் மூத்த சகோதரர் அமானுக்கு போன் செய்து அல்தமாசை கொலை செய்து விட்டதாகவும் அவனது உடலை காட்டுப் பகுதியில் சென்று எடுத்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

உடனே குடும்பத்தினர் பதறி அடித்து அங்கு சென்று பார்த்த போது சாலையோர புதரில் சிறுவன் அல்தமாஷ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தான். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது சிறுவனின் வளர்ப்பு தந்தை, பள்ளியில் இருந்து அவனை அழைத்துச் சென்று கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி உள்ளார்.

மேலும் சிறுவனின் கண்கள் பிடுங்கப்பட்டு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கொலை செய்த வஜித் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

இது குறித்து கொலையுண்ட மகனின் தாய் கூறும்போது, தனது கணவர் மீது ஏற்கனவே குடும்ப வன்முறை புகார் அளித்ததாகவும், ஆனால் தன்னையும் தனது 3 மகன்களையும் துன்புறுத்துவதை நிறுத்துவதாக அவர் உறுதியளித்ததை அடுத்து, அந்தப் புகாரை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 2 நாட்களுக்கு முன்பு, எங்களுக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டது. அப்போது நான் அவரை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னேன். இதனால் கோபமடைந்த அவர் எனது மகனை கொடூரமாக கொலை செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News