NCP சட்டமன்ற கட்சி கூட்டம் நாளை நடைபெறுகிறது: அஜித் பவார் மனைவி சுனேத்ரா தலைவராகிறார்
- அஜித் பவார் மறைவால் தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது.
- அவரது மனைவி சுனேத்ராவை தலைவராக மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான அஜித் பவார் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விமான விபத்தில் காலமானார். இவர் துணை முதல்வராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்க பாஜக தயாராக இருந்தால், தேசியவாத சட்டமன்ற கட்சித் தலைவர் யார் என்பது அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த நிலையில் நாளை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி நாளை கூடுகிறது. இதில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என அக்கட்சியின் தலைவரும், மாநில அமைச்சருமான சகான் புஜ்பால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புஜ்பால் கூறுகையில் "தேசியவாத காங்கிரஸ் கட்சி, சுனேத்ராவை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்தால், சனிக்கிழமை துணை- முதல்வராக பதவி ஏற்க இருந்தாலும் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக் கூட்டம் நாளை நடைபெறும். சுனேத்ரா பவார் தலைவராக அறிவிக்கப்படுவார். ஏராளமான தலைவர்கள் அவர் துணை முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இவ்வாறு புஜ்பால் தெரிவித்தார்.
288 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிராவில் சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 40 உறுப்பினர்கள் உள்ளனர். அஜித் பவார் காலமானாதால் பாராமதி தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.
சுனேத்ரா பவார் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவர் மகாராஷ்டிர சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லை.