வருமான வரித்துறை சோதனை நடுவே பிரபல தொழிலதிபர் சி.ஜே. ராய் உயிர்மாய்ப்பு

வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.மோகன்லால் நடித்த 'மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்', 'காஸனோவா' போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
வருமான வரித்துறை சோதனை நடுவே பிரபல தொழிலதிபர் சி.ஜே. ராய் உயிர்மாய்ப்பு
Published on

பெங்களூருவில் உள்ள தனது அலுவலகத்தில் கான்ஃபிடன்ட் குழுமத் தலைவர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

வருமான வரி மற்றும் அமலாக்க துறைகளின் தொடர்ச்சியான சோதனைகளுக்கு மத்தியில் இந்த முடிவை அவர் எடுத்தாதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவரது அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றது.

ராய் சோதனை அதிகாரிகள் கோரிய ஆவணங்களை தனது அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் இருந்து எடுக்க சென்றபோது, தனது சொந்த துப்பாக்கியை கொண்டு தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. உடனே அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

57 வயதான சி.ஜே. ராய் ரியல் எஸ்டேட் மட்டுமின்றி, மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்தார். மோகன்லால் நடித்த 'மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்', 'காஸனோவா' போன்ற படங்களை இவர் தயாரித்துள்ளார். ராய் சிரியாங்கந்தத் ஜோசப்பின் இந்த சோக முடிவு வணிக மற்றும் ரியல் எஸ்டேட் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com