இந்தியா

ஒரே ஸ்கூட்டியில் 5 பேர் பயணம்... ரீல்ஸ் வெளியிட்டு வசமாக மாட்டிக்கொண்ட மாணவர்கள்

Published On 2022-07-01 06:18 GMT   |   Update On 2022-07-01 06:18 GMT
  • இருசக்கர வாகனத்தை ஓட்டிய மாணவனின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
  • இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று பெற்றோர்களின் முன்னிலையில் மாணவர்கள் உறுதியளித்துள்ளனர்.

இடுக்கி:

கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர், ஒரே ஸ்கூட்டியில் பயணித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணித்த 5 மாணவர்களுக்கும் மோட்டார் வாகன துறையினர் அபராதம் விதித்தனர்.

அத்துடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிய மாணவனின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது. மாணவர்கள் 5 பேரும் இடுக்கி மருத்துவக் கர்லலூரியில் சமூக சேவை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் ரமணன் கூறியதாவது:-

மாணவர்கள் 5 பேரும் இடுக்கி மருத்துவக்கல்லூரியில் 2 நாட்கள் சமூகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு தகுதியான பிரிவில் அவர்களின் சேவையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினேன்.

இந்த உத்தரவை பிறப்பிக்கும் முன்பாக, மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, அவர்களின் முன்னிலையில் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினேன். விதிகளை மீறி வேகமாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விளக்கி கூறினேன். அப்போது அந்த மாணவர்கள் இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்ய மாட்டேன் என்று பெற்றோர்களின் முன்னிலையில் உறுதியளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News