செய்திகள்
திருப்பதி

கொரோனா ஊரடங்குக்கு பிறகு 2-வது முறையாக திருப்பதியில் ரூ.4 கோடியை எட்டிய உண்டியல் வருவாய்

Published On 2021-11-09 07:56 GMT   |   Update On 2021-11-09 07:56 GMT
நாக சதுர்த்தியையொட்டி நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் பெரிய சே‌ஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் வீதிஉலா பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இன்று 2-வது முறையாக ரூ.4 கோடியை உண்டியல் வருவாய் எட்டியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக திருப்பதியில் குறைந்த அளவு பக்தர்கள் ஆன்லைன் டிக்கெட் மூலம் தரிசனம் செய்து வந்தனர்.

தொற்று படிப்படியாக குறைந்ததால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக் கப்பட்டது. இதனால் உண்டியல் வருவாயும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 3-ந்தேதி 30,379 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15,327 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.16 கோடி வசூலானது.

4-ந்தேதி ரூ.2.63 கோடியும், 5-ந்தேதி ரூ.2.15 கோடியும், 6-ந்தேதி ரூ.2.17 கோடியும், 7-ந்தேதி ரூ.3.19 கோடியும் உண்டியலில் வருவாயாக கிடைத்தது.

திருப்பதியில் நேற்று 34,695 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 16,723 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.19 கோடி உண்டியலில் காணிக்கையாக கிடைத்தது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு 2-வது முறையாக உண்டியல் வருவாய் ரூ.4 கோடியை தாண்டியுள்ளது.

நாக சதுர்த்தியையொட்டி நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் பெரிய சே‌ஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் வீதிஉலா பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News