செய்திகள்

மேற்கு வங்காளம் - பாஜக வெற்றி பேரணியில் கையெறி குண்டு வீச்சு

Published On 2019-05-28 06:45 GMT   |   Update On 2019-05-28 06:45 GMT
மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க.வினர் நடத்திய வெற்றிப் பேரணியில் கையெறி குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தா:

ஏழு கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குபதிவு கடந்த 23ம் தேதி நடைபெற்றது. அதில் பாஜக 303 இடங்களை பெற்று தனி பெரும்பான்மை மிக்க கட்சியாக ஆட்சியை மீண்டும் கைப்பற்றி அசத்தியது.

கடந்த தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 2 தொகுதிகளை மட்டுமே பெற்ற பா.ஜ.க., இந்தத் தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றியது.

இதையடுத்து, மாநில பாஜக சார்பில் வெற்றி பேரணி நடத்த முடிவானது. இந்நிலையில், பிர்பும் மாவட்டம் மயூரேஸ்வர் என்ற இடத்தில் பா.ஜ.க. சார்பில் வெற்றி பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் சென்றவர்கள் மீது கையெறி குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயமில்லை.

ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் கையெறி குண்டு வீசியதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News