செய்திகள்

5 மாநில தேர்தல் முடிவுகள்: காங்கிரசுக்கு மோடி வாழ்த்து - மக்கள் தீர்ப்பை ஏற்பதாக அறிவிப்பு

Published On 2018-12-11 20:18 GMT   |   Update On 2018-12-11 20:18 GMT
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #AssemblyElection2018 #NarendraModi #Congratulate #Congress
புதுடெல்லி:

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, மிசோ தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் தீர்ப்பை பா.ஜனதா தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார். #AssemblyElection2018 #NarendraModi #Congratulate #Congress
Tags:    

Similar News