வைகுண்ட துவார தரிசனம் - திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள்
- பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
- அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. தொடர் விடுமுறை காரணமாக வைகுண்ட துவார தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான மக்கள்கள் குவிந்தனர்.
பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர். ஏ.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எவ்வளவு பக்தர்கள் தரிசனத்துக்கு வந்துள்ளனர் என கணித்து குறைந்த நேரத்தில் தரிசனத்திற்கு அனுமதித்தனர்
அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இன்று காலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பதியில் நேற்று 88,662 பேர் தரிசனம் செய்தனர். 24, 417 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 5.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.