தமிழ்நாடு செய்திகள்

ஆட்சியில் பங்கு என்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது.. அதற்கு சாத்தியமும் இருக்கிறது- பிரேமலதா விஜயகாந்த்

Published On 2026-01-05 15:57 IST   |   Update On 2026-01-05 15:57:00 IST
  • ஆட்சி மாற்றம் வேண்டும் என்று எதிர்கட்சியினர் கூறுகின்றனர்.
  • ஆளும் தரப்பு எங்களுடைய ஆட்சிதான் தொடரும் என்கிறார்கள்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நிச்சியமாக வரும் 2026 தேர்தல் ஒரு மாறுபட்ட தேர்தலாக இருக்கும் என்று பல இடங்களில் நான் கூறியிருக்கிறேன். மக்கள் விரும்பிய ஒரு அணி நிச்சயம் வெற்றிப்பெறும்.அனைவருக்கும் இந்த முறை அமைச்சரவையில் அங்கம் வகிக்கவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது.

அதாவது ஆட்சியில் பங்கு என்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது. அதற்கு சாத்தியமும் நிறைய இருக்கிறது.

கூட்டணியக்கு யார் ஏற்றுக்கொள்கிறார்கள், யார் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான விடை கூட்டணிகள் அமையும்போது மக்களுக்கு தெளிவாக புரியும்.

யார் ஆளுங்கட்சியோ அவர்களுக்குதான் அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஏனென்றால் அவர்கள்தான் 5 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிற்கு ஒரு வரலாறு உண்டு. 5 வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சிகள், காட்சிகள் மாறுகிறது. ஆனால் அதிமுக மட்டும்தான் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஆட்சிசெய்தது.

அதனால், ஆட்சி மாற்றம் வேண்டும் என்று எதிர்கட்சியினர் கூறுகின்றனர். ஆளும் தரப்பு எங்களுடைய ஆட்சிதான் தொடரும் என்கிறார்கள்.

"தை பிறந்தால் வழி பிறக்கும். வருகின்ற தேர்தல், தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது நடக்கும் ஒரு தேர்தலாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News