செய்திகள்
மத்திய அரசுடன் மோதல் எதிரொலி: ரிசர்வ் வங்கி கவர்னர் 19-ந் தேதி ராஜினாமா?
மத்திய அரசுடன் மோதல் நீடித்து வருவதால், ரிசர்வ் வங்கி கவர்னர் 19-ந் தேதி ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது. #RBIGovernor #UrjitPatel #Resign
புதுடெல்லி :
ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் படேல் பதவி வகித்து வருகிறார். ரிசர்வ் வங்கிக்கு தன்னாட்சி அதிகாரம் உள்ளது.
அந்த அதிகாரத்துக்கு சவால் விடும் வகையில், ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு சமீபத்தில் 3 கோரிக்கைகளை விடுத்தது. நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு பணத்தில் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கை.
இதற்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை.
இதையடுத்து, ரிசர்வ் வங்கி மீது மத்திய அரசு தரப்பில் வெளிப்படையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தனது 3 கோரிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கியை பணிய வைக்க ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7-வது பிரிவை பயன்படுத்தி, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், வருகிற 19-ந் தேதி பதவி விலகக்கூடும் என்று ‘மணிலைப்’ என்ற ஆன்லைன் பொருளாதார பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. உர்ஜித் படேலுக்கு நெருக்கமானவர்களை மேற்கோள்காட்டி, இந்த தகவலை தெரிவித்துள்ளது.
அந்த வட்டாரங்கள், “மத்திய அரசுடனான மோதலால் உர்ஜித் படேல் சோர்வு அடைந்ததுடன், அவரது உடல்நிலையையும் அது பாதித்துள்ளது. எனவே, இந்த மோதல் மேலும் அதிகரித்தால், ரிசர்வ் வங்கியின் போர்டு கூட்டம் 19-ந் தேதி நடைபெறும்போது அவர் பதவி விலகுவார்” என்று கூறியதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #RBIGovernor #UrjitPatel #Resign
ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் படேல் பதவி வகித்து வருகிறார். ரிசர்வ் வங்கிக்கு தன்னாட்சி அதிகாரம் உள்ளது.
அந்த அதிகாரத்துக்கு சவால் விடும் வகையில், ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு சமீபத்தில் 3 கோரிக்கைகளை விடுத்தது. நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு பணத்தில் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கை.
இதற்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை.
கடந்த மாதம் 26-ந் தேதி, மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா, இந்த பூசலை வெளிப்படுத்தினார். “ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை மதிக்காத அரசு, கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று அவர் கூறினார்.
இதையடுத்து, ரிசர்வ் வங்கி மீது மத்திய அரசு தரப்பில் வெளிப்படையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தனது 3 கோரிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கியை பணிய வைக்க ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7-வது பிரிவை பயன்படுத்தி, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், வருகிற 19-ந் தேதி பதவி விலகக்கூடும் என்று ‘மணிலைப்’ என்ற ஆன்லைன் பொருளாதார பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. உர்ஜித் படேலுக்கு நெருக்கமானவர்களை மேற்கோள்காட்டி, இந்த தகவலை தெரிவித்துள்ளது.
அந்த வட்டாரங்கள், “மத்திய அரசுடனான மோதலால் உர்ஜித் படேல் சோர்வு அடைந்ததுடன், அவரது உடல்நிலையையும் அது பாதித்துள்ளது. எனவே, இந்த மோதல் மேலும் அதிகரித்தால், ரிசர்வ் வங்கியின் போர்டு கூட்டம் 19-ந் தேதி நடைபெறும்போது அவர் பதவி விலகுவார்” என்று கூறியதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #RBIGovernor #UrjitPatel #Resign