செய்திகள்

காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் - குமாரசாமி

Published On 2018-09-04 11:44 GMT   |   Update On 2018-09-04 11:44 GMT
கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த தேர்தல் முடிவு குறித்து கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கூறியதாவது:-

வழக்கமாக நகர் பகுதிகளில் பாரதிய ஜனதா தான் அதிக இடங்களில் வெற்றி பெறும். ஆனால் இந்த தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கூட்டணி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2013-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 1960 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகள் தலா 905 இடங்களில் வெற்றி பெற்றன.

தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 982 இடங்களையும், பாரதிய ஜனதா 929 இடங்களையும், ஜே.டி.எஸ். கட்சி 373 இடங்களையும் பிடித்துள்ளன.

சுயேட்சை வேட்பாளர்கள் 329 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி ஒட்டுமொத்தமாக 1357 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News