செய்திகள்

உத்தரகாண்ட் முதல்-மந்திரியிடம் வாக்குவாதம்- ஆசிரியை கைது

Published On 2018-06-29 07:51 GMT   |   Update On 2018-06-29 07:51 GMT
உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவேந்திரசிங் ரவதிடம் வயதான பெண் ஆசிரியை வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.#TrivendraSinghRawat
டேராடூன்:

உத்தரகாண்ட் முதல்-மந்திரி (பா.ஜனதா) திரிவேந்திரசிங் ரவத் தலைநகர் டேராடூனில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

அப்போது அவரை வயதான பெண் ஆசிரியை தனக்கு இடமாறுதல் செய்யப்பட்டது தொடர்பாக கேள்விகள் கேட்டு வாக்கு வாதம் செய்தார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்தும் தொடர்ந்து முதல்- மந்திரியிடம் கோபத்தில் ஆவேசமாக பேசினார். இதையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். #TrivendraSinghRawat
Tags:    

Similar News