செய்திகள்

காஷ்மீரை சீரழித்த பின்னர் பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது - கெஜ்ரிவால் காட்டம்

Published On 2018-06-19 14:16 GMT   |   Update On 2018-06-19 14:16 GMT
காஷ்மீர் மாநிலத்தை சீரழித்த பிறகு கூட்டணியில் இருந்து பா.ஜ.க விலகியுள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார். #BJPDumpsPDP #MehboobaMuftiresigns #ArvindKejriwal
புதுடெல்லி :

காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயகக் கட்சி – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

இதற்கிடையே, பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் ஆட்சியை தொடர்வது இயலாத காரியம் என கூறி யாரும் எதிர்பாராத விதத்தில், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக பாஜக இன்று அறிவித்தது.

பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோருடன் அலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் மாநில பா.ஜ.க பொறுப்பாளர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனை அடுத்து, முதல்வர் மெகபூபா முப்தி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார். அங்கு விரைவில் கவர்னர் ஆட்சி அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு காஷ்மீரில் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை உடைத்துவிட்டதாக பா.ஜ.க சுயதம்பட்டம் அடித்துகொண்டது. ஆனால் இப்போது என்ன ஆனது ? காஷ்மீரை சீரழித்த பிறகு கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகியுள்ளது. என்று தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வு குறித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் பதிவு மூலம் கடுமையாக விமர்சித்துள்ளார். #KashmirCMresigns #BJPDumpsPDP #MehboobaMuftiresigns
Tags:    

Similar News