search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ram Madhav"

    பிரதமர் மோடி அனைத்து கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை களைந்து மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார் என்று பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறினார். #PMModi #RamMadhav
    புதுடெல்லி:

    தீவிரவாதிகளுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது பற்றி பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியதாவது:-

    புல்வாமாவில் இந்திய வீரர்கள் பலியான சம்பவம் ஒவ்வொரு இந்தியன் மத்தியில் ஆவேசத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதன்படி இந்திய விமானப்படை தக்க பதிலடி கொடுத்துள்ளது. நமது படைகள் எப்போதும் உலகத்தரம் வாய்ந்தது என்பதை நிரூபித்துள்ளது. வீரர்களுக்கு வீர வணக்கம்.

    இதில் பிரதமர் மோடி அரசியல் ரீதியாகவும் அனைத்து கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை களைந்து மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMModi #RamMadhav

    காஷ்மீர் மாநிலத்தை சீரழித்த பிறகு கூட்டணியில் இருந்து பா.ஜ.க விலகியுள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார். #BJPDumpsPDP #MehboobaMuftiresigns #ArvindKejriwal
    புதுடெல்லி :

    காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயகக் கட்சி – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

    இதற்கிடையே, பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் ஆட்சியை தொடர்வது இயலாத காரியம் என கூறி யாரும் எதிர்பாராத விதத்தில், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக பாஜக இன்று அறிவித்தது.

    பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோருடன் அலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் மாநில பா.ஜ.க பொறுப்பாளர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இதனை அடுத்து, முதல்வர் மெகபூபா முப்தி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார். அங்கு விரைவில் கவர்னர் ஆட்சி அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு காஷ்மீரில் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை உடைத்துவிட்டதாக பா.ஜ.க சுயதம்பட்டம் அடித்துகொண்டது. ஆனால் இப்போது என்ன ஆனது ? காஷ்மீரை சீரழித்த பிறகு கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகியுள்ளது. என்று தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வு குறித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் பதிவு மூலம் கடுமையாக விமர்சித்துள்ளார். #KashmirCMresigns #BJPDumpsPDP #MehboobaMuftiresigns
    ×