செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuKashmir #Encounter
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புனித ரமலான் மாதத்தில் காஷ்மீரில் நிபந்தனையுடன் கூடிய சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #Encounter