இந்தியா

ஆபரேஷன் சிந்தூரின்போது ராணுவ வீரர்களின் தாகம் தீர்த்த 10 வயது சிறுவனுக்கு பரிசளித்த ராணுவம்

Published On 2025-05-29 07:28 IST   |   Update On 2025-07-22 07:12:00 IST
  • ஷர்வன் சிங் என்ற சிறுவன் ராணுவ வீரர்களுக்கு தண்ணீர், லஸ்ஸி உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளான்.
  • சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டிய மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் பாராட்டினார்.

ஆபரேஷன் சிந்தூரின்போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுவனான ஷர்வன் சிங், ராணுவ வீரர்களுக்கு தண்ணீர், பால், லஸ்ஸி உள்ளிட்டவற்றை வழங்கி தாகம் தீர்த்துள்ளான்.

இதனால் பெரோஸ்பூரைச் சேர்ந்த ஷர்வன் சிங்கை நேரில் அழைத்துப் பாராட்டிய மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் சிறுவனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

இதன் பிறகு பேசிய சிறுவன், "வளர்ந்த பிறகு நானும் ஒரு ராணுவ வீரனாக வேண்டும்" என்று நெகிழ்ச்சிப் பொங்க கூறினார்.

Tags:    

Similar News