செய்திகள்
கோப்புப்படம்

தேர்தல் ஆணையம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது- சீமான்

Published On 2019-05-28 05:15 GMT   |   Update On 2019-05-28 05:15 GMT
பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
மதுரை:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களை பொறுத்தவரை நடந்து முடிந்த பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி தான் கிடைத்துள்ளது. நாங்கள் சாதாரண குடிமக்களாக பிறந்து உண்மையான அரசியலை கொண்டு வந்து புரட்சிகரமான அரசியலை செய்து வருகிறோம்.

இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. கடைகளில் இருந்து 150 வாக்கு எந்திரங்களை எடுத்து வருகிறார்கள்.

ஆட்டோவில் வாக்குப் பெட்டியை கொண்டு வருகிறார்கள். சிறுவன் வாக்கு எந்திரத்தை தூக்கிச் செல்கிறான். விடுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன. இந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பார்த்திருப்பீர்கள்.

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் நேர்மையாக இருப்பதால் என்ன பயன்?


நாம் வளர்ச்சி பெற்று வருகிறோம் என மோடி பேசி வருகிறார். 3 ஆயிரம் கோடியில் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்திருக்கிறார்கள்.

அதே குஜராத்தில் மாடியில் தீ விபத்து ஏற்படும் போது அதனை ஏணி வைத்து தண்ணீரை பீய்ச்சி அணைக்க நம்மிடம் வசதி இல்லை. இதனால் 28 மாணவ, மாணவிகள் இறந்துள்ளனர். பேரிடர் காலங்களில் மக்களை எப்படி காப்பாற்றுவது? என்ற அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாத நாடாக இந்தியா உள்ளது.

3 ஆயிரம் கோடி செலவு செய்து சிலை அமைத்தவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு ஏணி வாங்க முடியவில்லையா?

தேர்தலில் கமல்ஹாசன் எங்கள் வாக்கை பிரித்து இருப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை. 50 ஆண்டுகளாக நடித்த நடிகர் புதுசா வருகிறார். அவருக்கு ஓட்டு போட்டு பார்ப்போம் என மக்கள் நினைத்திருக்கலாம்.

இங்கு என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால் பா.ஜ.க. வரக்கூடாது என்ற கருத்தை நாங்களே அதிகமாக எடுத்து வைத்தோம். அதை தி.மு.க. அறுவடை செய்துள்ளது.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News