செய்திகள்
திருச்சியில் இன்று பிரேமலதா விஜயகாந்த் வேனுக்குள் அமர்ந்தவாறு பிரசாரம் செய்தார்.

எம்.ஜி.ஆர். கனவுப்படி திருச்சியை இரண்டாவது தலைநகராக்க நடவடிக்கை- பிரேமலதா விஜயகாந்த்

Published On 2019-04-08 11:28 GMT   |   Update On 2019-04-08 11:28 GMT
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கனவுப்படி திருச்சியை 2-வது தலைநகராக்க எல்லா விதத்திலும் முயற்சிகள் எடுப்போம் என்று தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #Loksabhaelections2019 #DMDK #PremalathaVijayakanth
திருச்சி:

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆண்டாள் வீதியில் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

திருச்சி பாராளுமன்ற தொகுதியை அனைத்து விதத்திலும் மேம்படுத்த முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திருச்சிக்கு அரசு கலை கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி கொண்டு வருவோம். வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுப்போம்.

உலக பொருளாதார வீழ்ச்சியால் வீழ்ந்த தனியார் நிறுவனங்களை மீட்கவும், வேலை வாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் ‘ஸ்டார்ட் அப் மையம்’ மற்றும் தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படும்.


அதேபோல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கனவுப்படி திருச்சியை 2-வது தலைநகராக்க எல்லா விதத்திலும் முயற்சிகள் எடுப்போம்.

திருச்சியில் விமான நிலையம் இருப்பதால் ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள் ஏற்படுத்தி, அனைவருக்கும் தொழில் முனைவோர் ஆவதற்கு பயிற்சி வழங்குவோம். வெற்றி பெற்றதும் திருச்சியை அனைத்து விதத்திலும் முன்னேற்ற பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார். #Loksabhaelections2019 #DMDK #PremalathaVijayakanth
Tags:    

Similar News