செய்திகள்
கூட்டணி கட்சிகளை ஆதரித்து ராகுல் காந்தி மீண்டும் தேர்தல் பிரசாரம்- திருநாவுக்கரசர்
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi #thirunavukkarasar
சென்னை:
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் வலுவான, பலமான கூட்டணி அமைந்துள்ளது. ஒத்த கருத்துடைய தலைவர்கள் இடம் பெற்றுள்ள கூட்டணி 39 தொகுதிகளிலும், இக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மக்கள் பிரச்சனைக்காக போராடுகிற இந்த கூட்டணியில் நான் திருச்சியில் போட்டியிட தலைவர் ராகுல் காந்தி வாய்ப்பு கொடுத்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் விரைவில் வர இருக்கிறார். பிரியங்கா வருவது பற்றி ராகுல்தான் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #RahulGandhi #thirunavukkarasar
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் வலுவான, பலமான கூட்டணி அமைந்துள்ளது. ஒத்த கருத்துடைய தலைவர்கள் இடம் பெற்றுள்ள கூட்டணி 39 தொகுதிகளிலும், இக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மக்கள் பிரச்சனைக்காக போராடுகிற இந்த கூட்டணியில் நான் திருச்சியில் போட்டியிட தலைவர் ராகுல் காந்தி வாய்ப்பு கொடுத்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மோடி எதுவும் செய்யவில்லை. மக்களுக்கு அவர் மீது வெறுப்பு தான் அதிகம் உள்ளது. ராகுல் தலைமையில் ஆட்சி அமையும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் விரைவில் வர இருக்கிறார். பிரியங்கா வருவது பற்றி ராகுல்தான் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #RahulGandhi #thirunavukkarasar