கால்பந்து

உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு வந்த FIFA உலகக்கோப்பை

Published On 2026-01-11 12:27 IST   |   Update On 2026-01-11 12:27:00 IST
  • FIFA கால்பந்து கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
  • இந்த கோப்பை 3 நாட்கள் இந்தியாவில் இருக்க உள்ளது

உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

இந்நிலையில், உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக FIFA உலகக்கோப்பை இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்தியாவில் FIFA கால்பந்து கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.

உலகக் கோப்பை வென்ற முன்னாள் பிரேசில் வீரரும் ஃபிஃபா ஜாம்பவானுமான கில்பர்டோ டி'சில்வா மற்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.

உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த கோப்பை 3 நாட்கள் இந்தியாவில் இருக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News