செய்திகள்

தமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது- வைகோ

Published On 2019-03-21 09:46 GMT   |   Update On 2019-03-21 09:46 GMT
இந்தியாவில் மோடி எதிர்ப்பு அலை வீசுவதுபோல் தமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். #Vaiko #LSPolls #ADMK
சென்னை:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் பிரசாரம் தொடங்க உள்ளேன். நாளை தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பிரசாரம் செய்கிறேன்.



இந்தியாவில் மோடி எதிர்ப்பு அலை வீசுவதுபோல் தமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது. எனவே தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் மதிமுக போட்டியிடும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் ஆளுநர் கருத்து கேட்டது வரம்பு மீறிய செயல்.

இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #LSPolls #ADMK
Tags:    

Similar News