அவினாசி பேருந்து நிறுத்த பகுதியில் மது பிரியர்களின் தொல்லையால் பெண்கள் அவதி
திருப்பூர் மாவட்டம் அவினாசி பேருந்து நிலையத்தில் மதுபிரியர்களின் தொல்லையால் பெண்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவினாசி பேருந்து நிலைய நடைபாதை மற்றும் இருக்கைகளில் ஒரு சில மதுபிரியர்கள், அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு அரைகுறை ஆடையுடன் உளறிக்கொண்டு தூங்குகிறார்கள்.
இவர்களின் செயல்பாட்டால் பஸ்சிற்கு காத்திருக்கும் பெண்களை முகம் சுழிக்க செய்கிறது. இதேபோல் அவினாசி காவல் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்த பகுதியில் பயணிகளின் இருக்கை உள்ளது. இங்கு பயணிகள் இருப்பதை விட மதுபிரியர்கள் தான் அதிக அளவில் படுத்து உறங்கி வருகிறார்கள்.
இதனால் பஸ்சிற்கு காத்திக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையம், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுப்பிரியர்களை அங்கிருந்த அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.