உள்ளூர் செய்திகள்

ஆரணி ஆற்றில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபர் கைது

Published On 2023-06-27 16:31 IST   |   Update On 2023-06-27 16:31:00 IST
  • மோட்டார் சைக்கிள் மணல் கடத்தி வந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.
  • பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சங்கர், தலைமை காவலர் செல்லமுத்து ஆகியோர் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். ஆரணி ஆற்றில் மங்களம் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மணல் கடத்தி வந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது அனுமதியின்றி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததை கண்டுபிடித்து மணலுடன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் அந்த வாலிபர் ஆரணி, புதிய தமிழ் காலனியைச் சேர்ந்த ராமராஜ்(வயது31) என்பது தெரிய வந்தது. எனவே, போலீசார் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

Tags:    

Similar News