உள்ளூர் செய்திகள்
வேலூர் இறைவன்காடு பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.
- தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன் பஜார்,
வேலூர்:
வேலூர் மின் பகிர்மான வட்டம் வேலூர் மற்றும் இறைவன்காடு துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர் புதிய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, ஆபீசர்ஸ் லைன், அப்துல்லாபுரம், கிருஷ்ணாநகர்,
பிஷப்ரோடு, கொசப்பேட்டை, ஓல்டுடவுன், சார்பனாமேடு, பி.டி.சி.ரோடு மற்றும் வல்லாண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம், அன்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை மின்வாரிய அதிகாரி ஆரோக்கியஅற்புதராஜ் தெரிவித்துள்ளார்.