உள்ளூர் செய்திகள்
கோவையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது
- போலீசார் சண்முகத்திடமிருந்து 11 கிராம் செயினை பறிமுதல் செய்தனர்.
- போலீசார் சண்முகத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை பெரிய நாயக்கன் பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. செயினை பறிகொடுத்தவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது பழனி கவுண்டன்புதூரை சேர்ந்த சண்முகம் (வயது 40) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 11 கிராம் செயினை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் சண்முகத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.