தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் நாளைமறுநாள் (03.01.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...

Published On 2026-01-01 14:43 IST   |   Update On 2026-01-01 14:43:00 IST
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
  • இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் மெயின் ரோடு, காந்தி அண்ணன் கோவில் தெரு.

சென்னை:

சென்னையில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னையில் நாளை மறுநாள் (03.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

எம்எம்டிஏ காலனி: ஏ-பிளாக் முதல் ஆர்-பிளாக் வரை கமலா நேரு நகர் 1 மற்றும் 2வது தெரு, அசோகா நகர், சுப்பாராவ் நகர், வீரபாண்டி நகர், ராணி அண்ணாநகர், கல்கி நகர், 100 அடி சாலை.

அரும்பாக்கம்: மேத்தா நகர், என்எம் சாலை, எம்எச் காலனி, ரெயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், பிராங்கோ இந்தியா, வைஷ்ணவ் கல்லூரி, கோவிந்தன் தெரு, கலெக்ட்ரேட் காலனி, அய்யாவூ காலனி காயத்ரி தேவி, ரசாக் கார்டன், ஜேடி துராஜ் ராஜ் நகர், ஆசாத் நகர், விஜிஏ நகர், எஸ்பிஐ அதிகாரி.

அழகிரி நகர்: தமிழர் வீதி, இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் மெயின் ரோடு, காந்தி அண்ணன் கோவில் தெரு, பெரியார் பாதை, அய்யப்பன் நகர், லட்சுமி நகர், ஆண்டவன் தெரு.

சூளைமேடு: சக்தி நகர் 1 முதல் 5வது தெரு, திருவள்ளுவபுரம் 1 மற்றும் 2வது தெரு, திருவேங்கடபுரம் 1 மற்றும் 2வது தெரு, நெல்சன் மாணிக்கம் சாலை, கிழக்கு மற்றும் மேற்கு நம்சிவாயபுரம், சூளைமேடு உயர் சாலை, கில் நகர், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீலகந்தன் தெரு, கான் தெரு.

கோடம்பாக்கம்: பஜனை கோவில் 3வது, 4வது தெரு ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. 

Tags:    

Similar News