உள்ளூர் செய்திகள்

குடும்ப தகராறில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-05-06 12:19 IST   |   Update On 2023-05-06 12:19:00 IST
  • குமார் இவரது மனைவி உமா (வயது 45), குமார் சரிவர வேலைக்கு செல்லாததால் கணவன், மனைவி இருவருக்குள் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டது
  • இதனால் மன உலைச்சலில் இருந்த உமா நேற்று அதே பகுதியில் உள்ள சொந்த நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்:

பண்ருட்டி அருகே குடுமியான் குப்பத்தை சேர்ந்தவர் குமார் இவரது மனைவி உமா (வயது 45), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குமார் சரிவர வேலைக்கு செல்லாததால் கணவன், மனைவி இருவரு க்குள் அடிக்க டி வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உலைச்சலில் இருந்த உமா நேற்று அதே பகுதியில் உள்ள சொந்த நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News