உள்ளூர் செய்திகள்
- விருதுநகர் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள தென்னிலைக்குடியைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மனைவி வள்ளி (வயது 65). இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நல பாதிப்பு இருந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வள்ளி சம்பவத்தன்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.