தமிழ்நாடு செய்திகள்

கூட்டணி குறித்து ஒருவாரத்தில் அறிவிப்பேன்- கிருஷ்ணசாமி

Published On 2026-01-24 13:12 IST   |   Update On 2026-01-24 13:12:00 IST
  • ஒருவார காலத்துக்குள் எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன்.
  • கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் கூட்டணிக்கு என சில வழி முறைகள் வைத்திருந்தனர்.

கோவை:

புதிய தமிழகம் கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும் என்று தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தற்போது வரை எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளார். நேற்று நடந்த பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இதுபற்றி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அளித்துள்ள பேட்டி வருமாறு:-

கூட்டணி குறித்து புதிய தமிழகம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஒருவார காலத்துக்குள் எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன். யாருடன் கூட்டணி என்பது குறித்து கலந்து பேசி வருகிறோம். வருகிற சட்டசபை தேர்தலில் கொள்கை ரீதியான ஆட்சி அமைக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறோம்.

மதுவிலக்கு, ஊழல், கனிம வள கொள்ளை, அரசு வேலைக்கு விலை என தமிழ்நாட்டின் நிலை மாறி உள்ளது. எங்கள் கொள்கைகளுக்கு ஒத்துப் போகிறவர்களுடன் பூரண மதுவிலக்கு உள்ளிட்டவற்றை குறைந்தபட்ச செயல்திட்டத்தில் கொண்டு வரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க சிந்தித்து வருகிறோம்.

கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் கூட்டணிக்கு என சில வழி முறைகள் வைத்திருந்தனர். ஆனால் இப்போது அதுபோன்று இல்லை. புதிய தமிழகத்தை அதிகாரப்பூர்வமாக எந்தக்கட்சியும் அணுகவில்லை.

தமிழ்நாட்டில் புதிய தமிழகம் இன்றி வெற்றி பெற முடியாத சூழ்நிலையில் தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் வலுவாக உள்ளோம். புதிய தமிழகம் கட்சி இல்லாமல் தென்மாவட்டங்களில் யாரும் வெற்றி பெற முடியாது. நாங்கள் தனித்து விடப்படவில்லை.

புதிய தமிழகம் கட்சி ஒரு சில பகுதிகளில் மட்டும் போட்டியிடும் என்பதால் தேர்தலுக்கு 5 நாட்கள் முன்புதான் சின்னம் கொடுப்பார்கள் என்றார். 

Tags:    

Similar News