உள்ளூர் செய்திகள்
- 2 குழந்தைகளுடன் பெண் மாயம் ஆனார்.
- பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசப்பட்டியை சேர்ந்தவர் காளிராஜன் (வயது 41) லாரி டிரைவர். இவரது மனைவி சாந்தி மற்றும் 2 குழந்தைகள் திடீரென வீட்டிலிருந்து மாயமாகிவிட்டனர்.
அவர்களை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. இதை தொடர்ந்து காளிராஜன் ஒத்தப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
அதில் அதே பகுதியை சேர்ந்த சோலைராஜ் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.