உள்ளூர் செய்திகள்

முதியவர் தற்கொலை

Published On 2022-09-22 13:36 IST   |   Update On 2022-09-22 13:36:00 IST
  • விருதுநகரில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜாஜி ரோடு பகுதிைய சேர்ந்தவர் நடராஜன் (வயது 79). இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்துள்ளார். இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து அவர் அதிகளவில் மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சிகிச்ைச அளித்து காப்பாற்றினர். இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் சிதம்பரம் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News