கிணற்றில் குதித்து முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை
- சாத்தூர், சிவகாசியில் கிணற்றில் குதித்து முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் அருேக உள்ள கே.சொக்கலிங்கா புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 72). சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் வாழ்க்கை யில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து அவரது மகன் ராஜமாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
சிவகாசி துரைச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி செல்வம் (50). இவர் சமீப த்தில் கண் ஆப்பரேசன் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நலக்குறைவு இருந்ததாக தொகிறது. இதனால் விரக்தியில் இருந்த அவர் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.