- விருதுநகர் மாவட்டத்தில் ஒரே ஆண்டில் காணாமல் போன 628 பேர் மாயமான 95 பேர் நிலைமை என்ன வென்று தெரியவில்லை.
- அவர்கள் எங்குசென்றார்கள்? என்ன ஆனார்கள்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பள்ளி- கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், வயதானவர்கள் மாயமாகி வருவது தொடர் கதையாக உள்ளது.
குடும்பத்தில் விரக்தி, காதல் தோல்வி, தொழில் நஷ்டம், தேர்வு பயம், தனிமை போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் உள்பட பலர் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நாள்தோறும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மாயமாவது அதிக அளவில் நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர கவனம் செலுத்தி போலீசார் விசா ரணை நடத்தினர்.
கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சிறுவர்-சிறுமி கள்,பெண்கள், மாணவிகள் என 628 பேர் மாயமாகி இருப்பதாக போலீஸ் நிலையத்தில் புகார்கள் வந்தன. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக இதுவரை 533 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெளியூர் மற்றும் உறவினர்கள் மற்றும் பழக்கமான நபர்களின் வீடுகளில் இருந்ததை கண்டறிந்து மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.ஆனால் இதில் இன்னும் 95 பேர் நிலைமை என்ன வென்று தெரிய வில்லை. அவர்கள் எங்குசென்றா ர்கள்? என்ன ஆனார்கள்? என போலீ சார் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், சமுதாயத்தில் தற்போது எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை எதிர்கொள்ள முடியாமல் சிலர் குடும்பத்தை விட்டு செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே குடும்பத்தில் யாரேனும் இது போன்ற நிலைமையில் இருந்தால் உடனே அவர்களுக்கு தகுந்த கவுன்சிலிங் வழங்கி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் அவர்கள் வாழ்க்கையை எதிர்நோக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்றனர்.