உள்ளூர் செய்திகள்

உலக சாதனை புரிந்த விருதுநகர் மாவட்ட கலெக்டரின் குழந்தை மீரா அரவிந்தாவுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

உலக சாதனை புரிந்த விருதுநகர் கலெக்டரின் குழந்தைக்கு பாராட்டு

Published On 2022-06-13 08:44 GMT   |   Update On 2022-06-13 08:44 GMT
  • விருதுநகர் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் “நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ்” உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான சாதனை முயற்சி நடந்தது.
  • குழந்தையை சாதனையாளராக உருவாக்கிய குரு செல்வராணி குமார் கவுரவிக்கப்பட்டார்.

விருதுநகர்

விருதுநகர் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் "நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ்" உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான சாதனை முயற்சி நடந்தது. இதில் கலெக்டர் மேகநாதரெட்டி-தீபிகா தம்பதியரின் 3 வயது மகள் மீரா அரவிந்தா 56 நடன முத்திரைகள் மற்றும் 9 நவரசங்கள் செய்து உலக சாதனை படைத்தார்.

இந்த குழந்தையை சாதனையாளராக உருவாக்கிய குரு செல்வராணி குமார் கவுரவிக்கப்பட்டார். இந்த சாதனை புரிந்ததற்காக மற்றும் இந்த சாதனையை நோபல் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தற்காக சான்றிதழ் மற்றும் பதக்கத்தை மீரா அரவிந்தாவுக்கு "நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" தென் இந்தியா இயக்குநர் திலீபன் மற்றும் நடுவர்கள் வழங்கி பாராட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் மேகநாதரெட்டி, "நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ்" தென் இந்தியா இயக்குநர் திலீபன், மாநில இயக்குனர் ஜெயக்குமார், நடுவர்கள் பசுபதி, நவீன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News